Published on Oct 8, 2024
மலபார் கடல் சார் பயிற்சி
மலபார் கடல் சார் பயிற்சி
  • நிகழாண்டு மலபார் கடல் சார் பயிற்சி, அக். 8-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. 

 

  • இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.இந்தப் பயிற்சி அக். 18– ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

 

  • இது விசாகப்பட்டி னத்தில் துறைமுகப் பகுதியில் தொடங்கி, பின்னர் தொடர்ந்து கடல் பகுதியில் நடைபெறுகிறது.

 

  • கடந்த 1992-ஆம் ஆண்டு இந்திய -அமெரிக்க கடற்படைக்கு இடையிலான இருதரப்பு கடற்படைப் பயிற்சியாக தொடங்கிய மலபார் பயிற்சி யில் பின்னர் ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் இணைந்தன.

 

  • இது, இந்திய பெருங்கடல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கும், பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கும் ஒரு முக்கிய பன்முக நிகழ்வாகும்.